தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 1,310 பேருக்கு கரோனா பாதிப்பு - சென்னையில் கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,310 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

tamil nadu covid cases today
tamil nadu covid cases today

By

Published : Feb 16, 2022, 8:31 PM IST

சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,310 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,374 பேர் குணமடைந்தனர். 10 பேர் உயிரிழந்தனர்.

அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 40 ஆயிரத்து 531ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 75 ஆயிரத்து 281ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 956ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 ஆயிரத்து 788 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 6 கோடியே 23 லட்சத்து 99 ஆயிரத்து 655 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 296 பேருக்கும், கோயம்புத்தூரில் 227 பேருக்கும், செங்கல்பட்டில் 110 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் நான்காயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா

ABOUT THE AUTHOR

...view details