சென்னை: தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையளன்று முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று, ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜனவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, முன்னர் இருந்தது போலவே முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த முழு ஊரடங்கு நாளில், கடந்த முறை பின்பற்றப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.