இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்! - tamil nadu 6 districts rain
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3168824-thumbnail-3x2-rain.jpg)
சென்னை வானிலை ஆய்வு மையம்
மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 38 மற்றும் 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
இதுவரை, விழுப்புரம் மாவட்டத்தில் 4 செ.மீ, பாண்டிச்சேரி, கடலூர் மாவட்டத்தில் தலா 2 செ.மீ மழையும், திண்டிவனத்தில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.