சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து தான் பாடியுள்ள பாடல் குறித்து நடிகர் டி.ராஜேந்தர் இன்று(ஏப்ரல்.25) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இப்பாடலை அஸ்மின் எழுத, சமீல் இசை அமைத்துள்ளார். அப்போது பேசிய டி.ராஜேந்தர், “இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் நமது தொப்புள் கொடி உறவுகள் துயரத்தில் ஆழ்ந்துகொண்டு இருக்கிறது என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.
அதன்காரணமாக மக்கள் படும்பாட்டை பார்த்துவிட்டு, இந்தியாவிற்குத் தரவேண்டிய கடனைக்கூட தரவேண்டாம் என்று இந்திய அரசு கூறியிருக்கிறது. தொடர்ந்து மனிதநேயத்தோடு இந்திய அரசு உதவி செய்திருக்கிறது. பால் இன்றி குழந்தைகள் பாடுபடுகின்றனர். ராஜபக்ச செய்த துரோகத்துக்கு தற்போது அனுபவித்து வருகிறார்.