சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலைய தலைவர் கிருஷ்ணதாஸ், செய்தி பிரிவின் இயக்குநர் குருபாபு பலராமன், நிகழ்ச்சி பிரிவின் தலைவர் ரஃபீக் பாட்ஷா ஆகியோர் பங்கேற்று பேசினர்.
அப்போது பேசிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, "வரும் 20ஆம் தேதி முதல் 75 வாரங்களுக்கு இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் பொதிகையில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு தமிழில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
மொத்தம் 75 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த தொலைக்காட்சி தொடரில் நாடு முழுவதிலும் இருந்து விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அறியப்படாத 75 விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பு செய்யப்படள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பூலித்தேவன், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய வீரர்களின் வரலாறும் இந்த தொடர்களில் ஒளிபரப்பாக உள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாளான ஆகஸ்ட் 20ஆம் தேதி அவரது தபால்தலையை வெளியிடும் நிகழ்ச்சி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தபால்தலையை வெளியிட தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் பெற்றுகொள்கிறார்.