தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சருக்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கடிதம்! - தேசியக்கல்விக் கொள்கை

தேசியக் கல்விக் கொள்கை குறித்து கொள்கை வழிகாட்டுதலை வழங்கிட வேண்டும் என முதலமைச்சருக்குப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கடிதம் அனுப்பி உள்ளது.

தேசியக்கல்விக் கொள்கை
தேசியக்கல்விக் கொள்கை

By

Published : Feb 21, 2022, 2:58 PM IST

சென்னை:உயர் கல்வி, பள்ளிக் கல்வித் துறைகளில் தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துதல் குறித்த மத்திய‌ அரசுத் துறைகளின் சுற்றறிக்கை, கருத்துக் கேட்பு அறிவிப்புகள் ஆகியவற்றின் மீது மாநில அரசின் நிலைப்பாடு குறித்தும், கொள்கை வழிகாட்டுதலை வழங்கிட வேண்டும் என முதலமைச்சருக்குப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கடிதம் அனுப்பியுள்ளது.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிக் கட்டமைப்பு 2022 குறித்து பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது பிப்ரவரி 21 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறையில் தேசியக் கல்விக் கொள்கை 2020-யை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆவணகள் குறித்த கருத்து கேட்பிற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வரைவு நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (Draft Institutional Development Plan - IDP), வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிக் கட்டமைப்பு (Draft National Higher Education Qualifications Framework - NHEQF) ஆகிய இரண்டு ஆவணங்கள் குறித்துத் தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை என்ன கருத்தைத் தெரிவித்துள்ளது? இது குறித்துத் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதைக் குறித்த எந்தத் தெளிவான அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இது குறித்து தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத் (Tamil Nadu State Council for Higher Education ) துணைத் தலைவர் ஒர் இதழுக்கு அளித்துள்ள பதில், உயர் பொறுப்பில் இருப்பவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பதிலாக அமையவில்லை.

வரைவு தேசிய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு குறித்து 2022, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை மத்திய அரசிற்குத் தெரியப்படுத்திய கருத்துகள் மாநில அரசின் பார்வைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

உயர் கல்வித் துறை போன்றே பள்ளிக் கல்வித் துறையிலும் பல்வேறு அறிவிப்புகள் தேசியக் கல்விக் கொள்கை 2020-யின் பாதகமான அம்சங்களை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே உள்ளது. மக்களுக்கு அதிர்ச்சி தெரியாமல் இருக்க பள்ளிக் கல்வித் துறையால் ஒரு மென்மையான அணுகுமுறை (euphemistic approach) கடைப்பிடிக்கப்படுகிறது.

வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்கப்படாமல் நடைமுறைக்கு வரும் பல அறிவிப்புகள் எதிர்காலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே முதலமைச்சர் உடனடியாக நேரடிக் கவனம் செலுத்தி உரிய கொள்கை வழிகாட்டுதலை உயர் கல்வி, பள்ளிக் கல்வித் துறைகளுக்கு வழங்கிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்துகிறது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தலைமைச் செயலரைச் சந்திக்கிறார் கமல் ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details