தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநில பெண்கள் பாதுகாப்பு நாள் - மாணவிகள் உறுதி மொழி ஏற்பு - ஜெயலலிதா பிறந்தநாள்

சென்னை: ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் உறுதிமொழியை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஏற்றனர்.

resolution
resolution

By

Published : Feb 24, 2020, 1:10 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி, மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் அந்நாளில் மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழியினை பள்ளிகளில் ஏற்க வேண்டுமென சமூகநலத்துறை அறிவுரை வழங்கியிருந்தது.

இதனைத்தொடர்ந்து அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியை சரஸ்வதி உறுதி மொழியை வாசிக்க மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

மாநில பெண்கள் பாதுகாப்பு நாள் - மாணவிகள் உறுதி மொழி ஏற்பு

இந்நாளில் இவ்வுறுதிமொழியினை பின்பற்றி தாங்களும் பாதுகாப்பாக இருப்பதுடன், பிற மாணவிகளையும் பாதுகாக்க பாடுபடுவோம் என மாணவிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளில் பள்ளிகளில் உறுதிமொழி

ABOUT THE AUTHOR

...view details