சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விளிம்பு நிலையிலுள்ள 12,563 நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கும் மற்றும் 2,35,890 ஆதிதிராவிடர், பழங்குடியினர், 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அடையாளமாக 10 நபர்களுக்கு இணையவழி பட்டாக்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் காவல் உதவி செயலியை தொடங்கி வைத்தார்.