கரோனா தாக்குதல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இதனால் பெரும்சிரமத்திற்கு ஆளாயினர். இந்நிலையில், அரசின் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 28ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 26ஆம் தேதி வரையும் துணைத்தேர்வு நடைபெறுகிறது.
மத்திய சென்னை பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, முகக்கவசம் வழங்கி கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் அளிக்கப்பட்டது.