தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 5, 2019, 12:56 AM IST

ETV Bharat / city

ஃபானி புயல் காரணமாக நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்-தெற்கு ரயில்வே!

சென்னை: ஃபானி புயல் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவிற்கு சிறப்பு ரயில்கள் நாளை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஃபானி புயல் காரணமாக நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்-தெற்கு ரயில்வே!

ஃபானி புயல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கடந்த இரண்டு நாட்களாக அறிவித்து வந்தது. இதனால் பல்வேறு ரயில்சேவைகள் ரத்தானதால் பயணிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானார்கள்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-ஷாலிமர் சிறப்பு ரயில் வண்டி எண்: 06166 நாளை மாலை 4.25 மணிக்கு புறப்படும். சிறப்பு ரயில் மே 6 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு கொல்கத்தா மாநிலம் ஷாலிமர் சென்று அடையும்.

சென்னை சென்ட்ரல்-புவனேஸ்வர் சிறப்பு ரயில் வண்டி எண்: 06164 சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மே 6 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்று அடையும்.

இந்த இரண்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கப்படும். இந்த இரண்டு ரயில்கள் ஒருவழி மார்க்கமாக மட்டுமே இயக்கப்படும், என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details