சென்னை: ரயிலிலிருந்து தவறிவிழுந்து சிறப்பு காவல்படை காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேல்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்துவருபவர் மோகன் (41). இவர் 2002ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்து சிறப்புக் காவல் படையில் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 26) காலை பணிக்காகக் கிளம்பிய அவர் ராமேஸ்வரம் விரைவு ரயிலின் வாயில் பகுதியில் நின்றுகொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் சேத்துப்பட்டு - எழும்பூர் பகுதிகளுக்கிடையே சென்றுகொண்டிருந்தபோது, காவலர் மோகன் கால்தவறி கீழே விழுந்துள்ளார்.