கடந்த 2015ல், வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பேசியதாக அவர் மீது, 2016ல் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அவதூறு வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு சம்மன்! - சிறப்பு நீதிமன்றம்
சென்னை: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மார்ச் 18 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி ஆர்.எஸ்.பாரதிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

barathi
பின்னர் இந்த வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு அண்மையில் மாற்றப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கே.ரவி, வழக்குத் தொடர்பாக, மார்ச் 18 ஆம் தேதி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஆர்.எஸ்.பாரதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.