இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் டிச.26 இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அதில் வந்த சென்னையை சோ்ந்த ஒரு பெண் பயணி ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த மூன்று தங்க செயின்களை கைப்பற்றினர். அதேபோல் சாா்ஜாவிலிருந்து கல்ஃப் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சோ்ந்த 2 ஆண் பயணிகளை சோதனையிட்டனர்.
அவா்கள் வைத்திருந்த லேப்டாப் சாா்ஜர் மற்றும் ஆடைகளில் 10 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர். இலங்கையிலிருந்து வந்த பெண் பயணி மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த இரு ஆண் பயணிகள் ஆகியோரிடமிருந்து 950 கிராம் தங்க செயின்கள்,தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவைகளின் மதிப்பு ரூ.42.3 லட்சம். இதையடுத்து மூன்று பயணிகளையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த விமானம் உள்நாட்டு விமானமாக டில்லி செல்ல தயாரானது.