சமூகத்தின் மீதான பற்றோடு எதையும் புதுமையாக செய்வதில் ஆர்வம் கொண்டவர் தாம்பரத்தை சேர்ந்த மதன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மதன், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வெரைட்டி டான்சராகவும் இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு காற்று புகமுடியாத ஸ்ப்ரிங் பலூனில் தலையை நுழைத்து, சுமார் ஒரு மணி நேரம் மூச்சை அடக்கி சாதனை படைத்த மதனை பாராட்டி, தமிழ்நாடு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்திருக்கிறது.
கரோனா காலத்திலும் உயர்ந்த மனிதன் போல் வேடமிட்டும், டிராகன் போன்ற உருவம் பொறித்த ஆடை அணிந்தும், கரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு இவர் ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில்தான், மனித இனத்தையே அச்சுறுத்தும் கொடிய கரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க சேவையாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்க திட்டமிட்டார் மதன்.