முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி குறித்து, தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் காவல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மண்டல தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராஜ் சத்யன், “சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியது கண்டிக்கத்தக்கது.