பெங்களூருவைச் சேர்ந்த முகமது அனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று பேரைக் கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய முக்கிய மூன்று குற்றவாளிகளை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
பிடிபட்ட மூன்று பேரிடமும் நடத்திய விசாரணையில், தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த போலி ஆவணங்கள் மூலம் சுமார் 15 சிம் கார்டுகளை வாங்கி பல்வேறு மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகளுக்கு கொடுத்து வந்தது அம்பலமாகியுள்ளது.