தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமூக வலைதளங்களில் அவதூறு; சித்த மருத்துவர் வீரபாபு புகார்! - மருத்துவர் வீரபாபு மீது சமூக வலைதளங்களில் அவதூறு

சென்னை: சமூக வலைதளங்களில் தன்னை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக சித்த மருத்துவர் வீரபாபு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

sidha-doctor-veerababu
sidha-doctor-veerababu

By

Published : Aug 15, 2020, 1:06 PM IST

சென்னை சாலிகிராமத்தில் வசித்துவரும் சித்த மருத்துவர் வீரபாபு(45) அரசு அனுமதி பெற்று கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளித்து வருகிறார்.

அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக வலைதளத்தில் மருத்துவ ஆலோசனை காணொலிகளையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒருவர் அவரது மருத்துவம் பொய்யானவை எனக் கூறி, தொடர்ந்து தகாத வார்த்தைகளால் கருத்து தெரிவித்து வந்துள்ளார். அதனால் வீரபாபு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அவர், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி தன்னுடன் வாடகைக்கு தங்கியிருந்த லியோ ஆண்டனி என்பவர் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், மருத்துவம் குறித்து பொய்யான தகவல் பரப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க:கரோனாவை குணப்படுத்தும் சித்த மருத்துவம் - தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய அரசுக்கு வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details