சென்னை: ஈக்காட்டுதாங்கல் நந்தி வர்மன் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று தி நகர் தாமோதரன் தெருவில் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தபோது, ஸ்மார்ட் சிட்டி பிளாட்பாரத்தில் தனியார் துணிக்கடைக்கு சொந்தமான விளம்பர பலகை ஒன்று வைக்கப்பட்டிருப்பதை கண்டார்.
பின்னர் விளம்பர பலகையை அகற்றக்கோரி கடையின் உரிமையாளர் அப்துல் கரீமிடம் ஊழியர் கண்ணன் தெரிவித்துள்ளார். அதற்கு மதுபோதையில் இருந்த அப்துல் கரீம் விளம்பர பலகையை அகற்ற முடியாது என தெரிவித்து மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.