தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 8, 2021, 12:35 PM IST

Updated : Aug 8, 2021, 2:14 PM IST

ETV Bharat / city

விவசாய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையைப் பெற்றுத்தருவதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் நடத்தப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை
வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் 11ஆம் தேதி வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது.

இதற்காக விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கருத்துக்கேட்புக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில வளர்ச்சி குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஆபிரகாம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறுகையில், "சட்டப்பேரவையில் வரும் 14ஆம் தேதி வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக விவசாயச் சங்கங்கள் அரசியல் கட்சியைச் சார்ந்த விவசாய சங்கங்களின் கருத்துகள் கேட்கப்படுகிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் வேளாண்மைக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி வரும் 14ஆம் தேதி வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து வேளாண் விளைபொருள்கள் சார்ந்த வியாபாரம் ஏற்றுமதி சங்கங்களிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளன.

இந்த நிதிநிலை அறிக்கையில் 10 ஆண்டுகளுக்குத் தேவையான அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். நிதிநிலை அறிக்கை ஆட்சி தொடங்கிய முதல் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. ஐந்தாண்டு முடியும் பொழுது விவசாயிகளின் நிலை தன்னிறைவு அடைந்து தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் இருக்கும்.

விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் கடந்த பத்தாண்டுகளில் முடக்கப்பட்டிருந்தன. விவசாயிகளின் விளைபொருள்களை கரோனா காலத்தில் 48, 000 வாகனங்களில் விற்க அனுமதி வழங்கப்பட்டது.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

மேலும் விளைபொருள்களை விற்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கு இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்ப்பது தொடர்பாக திமுக அரசு உறுதியாக இருக்கிறது.

கரும்பு சாகுபடியில் கூலி ஆள்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சினை உள்ளது. எனவே கரும்பு அறுவடையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும். கரும்பு உற்பத்தி விலையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு ஆயிரத்து 500 கோடி நிலுவைத் தொகை உள்ளது. நிலுவைத்தொகை பிரச்சினைக்குத் தீர்வு காண ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகள் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகள் உள்ளிட்டோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நிலுவைத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Last Updated : Aug 8, 2021, 2:14 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details