தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயம்பேடு கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து பதிலளிக்க ஆணை! - கோயம்பேடு பழச்சந்தை

சென்னை: கோயம்பேடு கனி விற்பனை அங்காடியை முழுமையாகத் திறக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், கோயம்பேடு சந்தை நிர்வாகக்குழு ஆகியவற்றுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

market
market

By

Published : Oct 16, 2020, 2:54 PM IST

ஊரடங்கு தளர்வுகளுக்குப்பின் கோயம்பேடு உணவு தானிய அங்காடியை செப்டம்பர் 18ஆம் தேதியும், காய்கறி அங்காடியை 28ஆம் தேதியும் திறக்க அரசு அனுமதித்தது. இந்நிலையில், கனி அங்காடியை திறக்க உத்தரவிடக் கோரி கோயம்பேடு நான்காவது நுழைவு வாயில் கனி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் போதுமான வசதிகள் இல்லை எனவும், பதிவு செய்யப்பட்ட 700 வியாபாரிகள் உள்ள நிலையில், 200 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற வியாபாரிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோயம்பேடு கனி அங்காடியை திறப்பது குறித்து அரசு மழுப்பலாக பதில் அளிப்பதாகவும், ஆயுத பூஜை வருவதால் கனிகள் மொத்த அங்காடியை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், மனுவுக்கு டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு நகராட்சி நிர்வாக செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சந்தை நிர்வாக குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பயணிகள் குறைவு...மந்த நிலையில் தனியார் பேருந்து சேவை!

ABOUT THE AUTHOR

...view details