அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில், அதன் பொது செயலாளர் பழனியப்பன் தொடர்ந்துள்ள வழக்கில், "தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்ணங்களும் அரசே செலுத்தும். ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசு செலுத்தவில்லை. இது தொடர்பாக தற்போது வரை பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.