தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 20, 2021, 10:59 PM IST

ETV Bharat / city

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை!

வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

சத்யபிரதா சாகு , Satyaprada Sagu consults with all District Election Officers, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை
satyaprada-sagu-consults-with-all-district-election-officers

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் பதிவான வாக்கு இயந்திரப் பெட்டிகள் மாவட்ட ரீதியாக 75 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் மே 2ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, காணொலி காட்சி மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நாளை (ஏப்.20) அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வாக்கு எண்ணும் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை, காஞ்சி, வேலூர், விழுப்புரம்,தி.மலை மாவட்டங்களின் கடைசி பேருந்துகளின் பட்டியல்!

ABOUT THE AUTHOR

...view details