சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த செல்வகணபதி என்பவர், தீபாவளி பண்டிகையை ஒட்டி, மொத்தமாக பட்டாசுகளை வாங்கி தனக்கு சொந்தமான கடையின் பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார்.
கடந்த 26ஆம் தேதி மாலை ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பட்டாசுகள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்தக் கோர விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.