அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட மூன்று வழக்குகளில் இதுவரை 50 பேரை கைதுசெய்துள்ள சிபிசிஐடி, குரூப்-4 தேர்வில் முக்கிய இடைத்தரகராக இருந்த ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரும் குரூப் 2ஏ, விஏஓ ஆகிய தேர்வுகளிலும் பணம் வசூல்செய்து மோசடியில் ஈடுபட்டதையும் கண்டுபிடித்தது.
குரூப் 4 விவகாரத்தில் முதற்கட்டமாக இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தனை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை முடித்திருந்த நிலையில், தற்போது குரூப் 2ஏ, விஏஓ தேர்வுகளில் செய்த முறைகேடு தொடர்பாகவும் விசாரிக்க முடிவுசெய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.