சென்னை: Jallikattu: நந்தனம் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கால்நடை வளர்ப்பு மூலம் பெறும் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை செயல்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.
எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதனையடுத்து, அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த கால்நடைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு நலத் திட்டம்
நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க நெல்லையில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை மற்றும் குஞ்சு பொறிப்பகம் ரூ.9.42 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றும், ஆண்டுக்கு 5 லட்சம் கோழிக்குஞ்சுகளை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.