சென்னை உயர் நீதிமன்றத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து, அவரது மனைவி ஜமுனா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் பின்புலத்துடன் குற்றவாளிகள் பலர் புதுச்சேரியில் உலா வருவதாக கருத்து தெரிவித்தனர். அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிருஷ்டவசமானது.
குற்றவாளிகளுக்கு கட்சியில் இடமளிப்பது, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது போன்றவற்றை, கட்சிகளின் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே, அரசியலை தூய்மைப்படுத்த முடியும். குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழைந்து, சட்டப்பேரவை - மக்களவை உறுப்பினர்களாகி, அமைச்சராகவும் பதவி ஏற்பது, மக்களுக்கு தவறான தகவலை கொண்டு சேர்க்கும் என தெரிவித்த நீதிபதிகள், குற்றவாளிகள், அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கக் கூடாது.
குற்றவாளிகள் அரசியலில் நுழைவது வேதனை அளிக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம்! - மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேதனை
சென்னை: அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிருஷ்டவசமானது என, சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
![குற்றவாளிகள் அரசியலில் நுழைவது வேதனை அளிக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம்! மெட்ராஸ் உயர்நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:35:28:1597316728-tn-che-03-rowdyturnpolitician-script-7204624-13082020163110-1308f-1597316470-351.jpeg)
இதைத் தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும், புதுச்சேரியில் எத்தனை ரவுடிக் கும்பல்கள் உள்ளன? குற்ற பின்னணியுடன் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் எத்தனை பேர்? ரவுடிக் கும்பல்கள் மீதான வழக்குகள் எத்தனை? அந்த வழக்குகளின் நிலை என்ன? சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுகிறார்களா? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? நாட்டு வெடிகுண்டுகளை போல, சட்ட விரோத ஆயுதங்கள் ஏதேனும் புதுச்சேரியில் பயன்படுத்தப்படுகின்றன? மகாராஷ்டிரா போல புதுச்சேரியில் ரவுடி கும்பலை ஒழிக்க தனிச்சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அவற்றுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.