தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (37). இவர் வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள மதுபானக் கடை அருகில் நடந்து சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி உள்ளனர். இதனால் ரமேஷ்குமார் அந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேரும் ரமேஷ்குமார் இருசக்கர வாகனத்தில் குண்டுகட்டாக தூக்கி கொண்டு மார்க்கெட் பகுதி உள்ளே அழைத்துச்சென்று சரமாரியாக அடித்து அவர் காதில் அணிந்திருந்த தங்கக் கம்மலையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.