தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 23, 2020, 10:53 PM IST

ETV Bharat / city

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் காவல் துறை சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

road-safety-week-2020-in-all-over-tamil-nadu-medical-camp-conducted-for-motorists
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்!

நாகை:
தமிழ்நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஓட்டுனர்களுக்கு பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

தஞ்சை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கார் வேன் ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் காவல் துறை, நாடி மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது. அதில் நோய்தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நாடி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்!

கன்னியாகுமரி:
பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி உட்கோட்ட போக்குவரத்து காவல் துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகனப் பேரணி மகாதானபுரம் ரவுண்டானா முதல் கன்னியாகுமரிவரை நடைபெற்றது.

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் 31ஆவது போக்குவரத்து வார விழா தொடங்கப்பட்டு பொதுமக்கள், மாணவர்கள் பார்வைக்காக செங்கம் புதிய பேருந்து நிலையத்தில், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை குறித்தும் விளம்பர பதாதைகள் வைக்கப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி போக்குவரத்து காவல் துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூர் நான்கு ரோடு பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலை கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கி ரோஜா பூ கொடுத்து இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலை கவசம் அணிய வேண்டும் என அறிவுறத்தப்பட்டது.

தலைகவசம் அணியாதவர்களுக்கு ரோஜாப்பூ கொடுக்கப்பட்டது

வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்:

31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் 1940ஆம் வருட மோரிஸ் என்ற பழமையான கார், குதிரை வண்டிகள் பங்கேற்றன. இது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.


இதையும் படியுங்க: தனியார் நிதி நிறுவன கடன் சமரச தீர்வு முகாமில் வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details