தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 29, 2021, 9:49 AM IST

ETV Bharat / city

வசூலிக்கப்படாமல் உள்ள ரூ.1552 கோடி சொத்து வரி

தமிழ்நாட்டில் 13 மாநகராட்சிகளில் கடைசி மூன்று ஆண்டுகளில் 1552 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யபடாமல் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காசிமாயன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 15 மாநகராட்சியில் இதுவரை பெற்ற வரி தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு கேட்டிருந்தார். அதன்படி வரி தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சொத்து வரி

  • மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 2 ஆயிரத்து 759 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை ஆயிரத்து 207 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 1552 கோடி ரூபாய்

    காலி நில வரி
  • மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 345 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 74 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 271 கோடி ரூபாய்

    குடிநீர் வரி
  • மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 802 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 372 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 430 கோடி ரூபாய்

    நிலத்தடி வடிகால் வரி
  • மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 382 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 86 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 296 கோடி ரூபாய்

    தொழில் வரி
  • மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 425 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 226 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 199 கோடி ரூபாய்

வரி அல்லாத வருவாய்

  • மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 909 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 230 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 679 கோடி ரூபாய்

    SUC tax
  • மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 229 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 137 கோடி ரூபாய்
  • மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 92 கோடி ரூபாய்

ABOUT THE AUTHOR

...view details