சென்னை: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா செட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள தனது சொத்து, வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பான விற்பனை பத்திரத்தை ரத்து செய்ய மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, நில உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்கள் தவிர, மூன்றாம் நபர்கள் எவரேனும் மோசடியாக சொத்துக்களை தங்கள் பெயரில் பதிவுசெய்யவில்லை என்பதை உறுதிசெய்ய, உரிய நடைமுறைகளை பதிவுத்துறை ஏற்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
'சொத்துக்களை சட்டவிரோதமாக பதிவுசெய்வதை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்க'
சொத்துக்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவுசெய்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
chennai high court
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பேருந்து சேவைக்கு அனுமதி?