தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்கட்டணம் செலுத்த ஜூலை வரை அவகாசம் கோரி வழக்கு! - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வீட்டுப் பயன்பாட்டு மின்சாரத்திற்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை வரை நீட்டிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Apr 30, 2020, 1:42 PM IST

கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் தவித்துவருகின்றன.

இதனால், வீடுகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என வழக்குரைஞர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், விவசாயக் கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணங்களை மே 6ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

உற்பத்தி நடக்காமல் ஊழியர்களுக்கு ஊதியங்கள் வழங்கிவரும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் நிதி நெருக்கடி அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் எனவும், அதனால், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கான குறைந்தழுத்த மின் இணைப்புக்கான கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு அவசர கால மனுக்களை விசாரிக்கும் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் உதவுக’ - அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details