தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஏப்ரல். 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று வேளச்சேரியில் இரண்டு இருசக்கர வாகனத்தில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1 விவிபேட் எடுத்துச் சென்றது சர்ச்சையை கிளப்பியது.
இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92 இல் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.