தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இனி இதை செய்தால் ரேஷன் கார்டு க்ளோஸ்... - ரேஷன் கார்டு முடக்கம்

ரேஷன் கடைகளில் இத்தனை நாள்கள் பொருள்களை வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ration card
ration card

By

Published : Oct 6, 2021, 4:40 PM IST

ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதில் மூன்று மாதங்களாக பொருள்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுகள் முடக்கப்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில், ரேஷன் கடை தொடர்பான வழக்கு ஒன்றில் ஏராளமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அதனால், அம்மாநில அரசு மூன்று மாதங்கள் பயன்பாட்டில் இல்லாத கார்டுகளை முடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதேபோல, தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்க உள்ளன. அதனால் குடும்ப அட்டை தாரர்கள் இதனை கவனத்தில் கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க:அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details