தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 7, 2019, 1:39 PM IST

ETV Bharat / city

ராபர்ட் பயாஸ் பரோல் மனு பரிசீலனையில் உள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்!

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராபர்ட் பயாஸின் பரோல் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

robert-bayas

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரில் ஒருவர் ராபர்ட் பயாஸ். இவர் தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய 30 நாள்கள் பரோல் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

சிறைத் துறை டிஐஜிக்கு அளித்த மனு மீது 40 நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பரோல் வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு, சிறைத் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், பரோல் கோரிய விண்ணப்பத்தில் ராபர்ட் பயாஸ் தங்கவிருக்கும் முகவரியைத் தெரிவிக்காததால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், தற்போது முகவரி குறிப்பிட்டு ராபர்ட் பயாஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம், சிறைத் துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: அமைச்சர் உருவபொம்மை எரிப்பு: திமுக செயலாளர் உள்பட 26 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details