தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதுச்சேரி அரசின் உத்தரவு செல்லாது - உயர் நீதிமன்றம் அதிரடி - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Aug 28, 2020, 12:27 PM IST

புதுச்சேரி அரசு 2007ஆம் ஆண்டு மதிப்பு கூட்டு வரி சட்டப்பிரிவு 31 இன்கீழ், அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்குப் பெட்ரோலுக்கு 28%, டீசலுக்கு 21.80% வரியும், மாஹே பகுதியில் பெட்ரோலுக்கு 23.90%, டீசலுக்கு 18.15% வரியும், ஏனாம் பகுதியில் பெட்ரோலுக்கு 25.70%, டீசலுக்கு 20% வரியும் உயர்த்தப்பட்டது.

இந்த வரி உயர்வை எதிர்த்து புதுவை மாநில பாமக நிர்வாகி தேவமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதில், ”ஊரடங்கால் பொது போக்குவரத்து இல்லாமல், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவருமே இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையே நம்பி உள்ளனர்.

இந்நிலையில், புதுவை அரசு கடந்த மே 27ஆம் தேதி அன்று, மதிப்புக்கூட்டுச் சட்டம் 2007 பிரிவு 31-ஐ பயன்படுத்தி வெளியிட்ட அரசாணை தவறானது. பிரிவு 31 என்பது பொருள்களின் மீதுள்ள வரியை குறைப்பதற்கான விதி. ஆனால், அரசு இதனை அவசரகதியில் கொண்டுவந்து வரியை உயர்த்தியுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட வரிக்குத் தடைவிதித்து, அந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், புதுச்சேரி அரசு பிரிவு 31இன் கீழ் பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியது செல்லாது எனத் தீர்ப்பளித்தார். மேலும், மதிப்புக்கூட்டு வரி சட்டப்பிரிவு 31-ஐ பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வரியைக் குறைக்க மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளதால், வரியை உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்துசெய்வதாகவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் தொடர் திருட்டு: சிசிடிவி கேமராவால் சிக்கிய இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details