தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'விவசாயப் பணிகளை மேற்கொள்ள தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்' - டிடிவி தினகரன் - விவசாயப் பணிகளை மேற்கொள்ள தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்

சென்னை: விவசாயப் பணிகளை மேற்கொள்ள தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ttv dinakaran
ttv dinakaran

By

Published : Apr 25, 2020, 3:56 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

"விவசாயப் பணிகளைச் செய்ய தடையில்லை' என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும், விவசாய மின் மோட்டார்களுக்கான மும்முனை (3phase) மின்சாரம் சரிவர வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் வருகின்றன. இதனால் காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயத்திற்கான மும்முனை மின்சாரத்தை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது தடையின்றி வழங்கிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விவசாயப் பணிகளுக்கான விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details