தமிழ்நாடு

tamil nadu

வெள்ளிக்கிழமை மின்தடை: சென்னையில் எங்கெங்கு?

By

Published : Sep 17, 2020, 3:28 PM IST

சென்னை: சென்னையில் நாளை ( செப் 18 ) சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை  மின்தடை: சென்னையில் எங்கேங்கு?
வெள்ளிக்கிழமை மின்தடை: சென்னையில் எங்கேங்கு?

இது தொடர்பாக வெளியிடுள்ள அறிக்கையில், "சென்னையில் நாளை ( செப் 18 ) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

சேலையூரை சுற்றியுள்ள ஐ.ஏ.எப். ரோடு கிழக்கு தாம்பரம் ஒரு பகுதி, பேராசிரியர்கள் காலனி, பெத்தேல்புரம், பகவதி நகர், லீலா நகர், ஆனந்தாபுரம், வினோபா நகர், ஏஸ்.ஓ,ஏஸ், ஆதி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அடையார் இந்திரா நகர் அருகில் உள்ள வெங்கடேஷ்வரர் நகர், சாமிநாதன் நகர் 5, 7, 9ஆவது தெரு, விவேகனந்தா தெரு, கலத்துமேட்டு தெரு ஆகிய பகுதிகளிலும் மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்க ஏரியாவுல கரண்ட் இல்லையா? இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க!

ABOUT THE AUTHOR

...view details