நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அதில் தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், எழுதுப்பொருள்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது, இரண்டு அரசுகளுக்கு இடையேயான ஈகோவினால் இதுபோல் செய்யக்கூடாது, எனவே ஏற்கனவே பிரிண்ட் செய்யப்பட்ட பாடப் புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப் பைகளை வீணாக்கக் கூடாது.
ஜெயலலிதா, பழனிசாமி படத்தோடு பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தோடு இருப்பில் உள்ள பாடப்புத்தகங்களை விநியோகம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை நான்கு வாரத்திற்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
![ஜெயலலிதா, பழனிசாமி படத்தோடு பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படத்தோடு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யக்கோரி வழக்கு ஒத்திவைப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:52:36:1626160956-tn-che-01-discardingcmportraits-script-7204624-13072021111525-1307f-1626155125-74.jpeg)
ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படத்தோடு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யக்கோரி வழக்கு ஒத்திவைப்பு
அவற்றை மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை பிரிண்ட் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.