பொள்ளாச்சியில் கும்பல் ஒன்று பல இளம்பெண்களை மிரட்டி ஆபாசமாக படமெடுத்தும், பாலியல் தொந்தரவு கொடுத்தும் வந்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் புள்ளிகளின் வாரிசுகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, இதுதொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசு குறிப்பிட்டிருந்தது. அரசின் இந்த அலட்சிய போக்குக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மீனாட்சி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுவில், ”பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை பாதுகாக்கும் கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது.