தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 24, 2020, 2:45 PM IST

Updated : May 18, 2020, 9:17 PM IST

ETV Bharat / city

ஊரடங்கை மீறி சுற்றிய நபர்கள் - செய்தித்தாளை படிக்க வைத்து நூதன தண்டனை!

சென்னை: ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய நபர்களை நாளிதழில் உள்ள கரோனா செய்திகளை படிக்க வைத்து நூதன தண்டனை வழங்கப்பட்டது.

police
police

கரோனாவிற்கு தற்போது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்பதே ஒரே வழியாக இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி தேவையற்ற காரணங்களைக் கூறி பொதுமக்களில் சிலர் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.

ஊரடங்கு மீறலைத் தடுக்க காவல்துறையினரும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், திருமுல்லைவாயல் அருகே சி.டி.எச் சாலையில் வலம் வந்த நபர்களை, அங்கு தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர்களை வரிசையாக நிற்க வைத்த திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் புருசோத்தமன், இன்றைய செய்தித்தாளை வழங்கி, நாட்டு நடப்புகளை படிக்க வைத்தார்.

குறிப்பாக கரோனா குறித்த உலகளாவிய செய்திகளை அனைவரையும் உரக்க வாசிக்கச் செய்து நூதன தண்டனை வழங்கினார். மேலும், அவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, அவர்களது விவரங்களை பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: தைல காட்டில் தனிமையிலிருந்த காதல் ஜோடி... ட்ரோனை பார்த்து தெறித்து ஓட்டம்!

Last Updated : May 18, 2020, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details