தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 23, 2019, 2:39 PM IST

ETV Bharat / city

பயங்கரவாதிகள் ஊடுருவல்...! பாதுகாப்பு வளையத்தில் தலைநகர்

சென்னை: பயங்கரவாதிகளின் ஊடுருவல் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன்

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் தனியார் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அவசர ஊர்தி ஒன்றை காவல் ஆணையர் விஸ்வநாதன் வழங்கினார்.

சென்னை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன்

மேலும், அந்த தனியார் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட இரண்டு லட்ச ரூபாயை ஏழைப் பெண் ஒருவருக்கு திருமண உதவித் தொகையாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஸ்வநாதன், பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் ஸ்டாமிங் ஆப்பரேஷன் போன்ற பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details