தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல் - விரட்டிப் பிடித்த காவல் துறை - காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்

சென்னை அம்பத்தூரில் காரில் செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றவர்களை காவல் துறையினர் விரட்டிச் சென்று கைது செய்துள்ளனர்.

காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்
காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்

By

Published : Dec 28, 2021, 9:58 PM IST

சென்னை:அம்பத்தூர் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர் அண்ணாமலை ஆகியோர் இன்று (டிச.28) காலை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அம்பத்தூர் தொழிற்பேட்டை சிடிஎச் சாலையில் கார் ஒன்று அதிவேகமாகவும், அதனை ஓட்டியே ஓட்டுநர் செல்ஃபோனில் பேசியபடி வருவதாக பொதுமக்களிடம் இருந்து தகவல் வந்தது.

இதையடுத்து அந்த காரை பின்தொடர்ந்த காவல் துறையினர், விரட்டி அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐடிஐ அருகே மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரில் இருந்த ஓட்டுநரிடம் லைசென்ஸ் வாங்கி விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதன் பிறகு, காவல் துறையினர் காரை சோதனை செய்தனர். அப்போது காரின் முன், பின்பக்க இருக்கையில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து செம்மரக்கட்டைகளை கைப்பற்றிய அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையததில் ஒப்படைத்தனர்.

பின்னர், சட்ட ஒழுங்கு ஆய்வாளர் மல்லிகா தலைமையில் காவல் துறையினர் காரை ஆய்வு செய்தனர். அப்போது, அதில், 1 டன் எடையுள்ள 18 துண்டு செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. மேலும், புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்

விசாரணையில், போக்குவரத்து காவல் துறையிடம் இருந்த லைசன்ஸில் இருந்த முகவரி புது வண்ணாரப்பேட்டை, அசோக் நகரைச் சேர்ந்த செய்யது சாதிக் (25) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் செம்மரகட்டைகளை கடத்திய காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளர், தப்பி ஓடிய செய்யது சாதிக் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:Jewellery robbery: கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை - 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details