தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 30, 2021, 9:26 AM IST

Updated : Aug 30, 2021, 9:33 AM IST

ETV Bharat / city

சு.சுவாமியின் கருத்தைச் சுட்டிக்காட்டி பணமாக்குதல் திட்டத்தைச் சாடிய பிடிஆர்!

உள்கட்டமைப்பை குத்தகைக்குவிடும் 'பணமாக்குதல் திட்டம்' குறித்து மத்திய பாஜக அரசை கடுமையாகச் சாடியுள்ளார் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

பிடிஆர்
பிடிஆர்

சென்னை:நாட்டின் ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) காலாண்டுக்கு காலாண்டு வீழ்ச்சி அடைந்துவருவதை மேற்கோள்காட்டும் தரவுகளுடன் சுட்டிக்காட்டும் பாஜக மூத்தத் தலைவரும், பொருளாதார வல்லுநருமான சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொருளாதாரம் ஆழ்ந்த வீழ்ச்சியில் இருக்கும்போது, பொது நிறுவனங்களை விற்பது என்பது மனநலக் கோளாறு, விரக்தியின் அறிகுறியையே காட்டுகிறது. இது ஒரு ஆரோக்கியமான கருத்தியல் தேவையாக இருக்க முடியாது.

நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 2016-லிருந்து காலாண்டுக்கு காலாண்டு வீழ்ச்சி அடைந்துவருகிறது என்ற தரவை மேற்கோள்காட்டும் சி.எஸ்.ஓ. அறிக்கையை மோடி அரசு மறுக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் இந்தக் கருத்தைப் பகிர்ந்துள்ள பழனிவேல் தியாகராஜன் தனது ட்வீட்டில், "உள்கட்டமைப்பை குத்தகைக்குவிட்டு பணமாக்குதல் தொடர்பாக அவர் (சுப்பிரமணியன் சுவாமி) என்ன நினைக்கிறார் என்பதை இப்போது கற்பனைசெய்து பாருங்கள்.

அவர்களின் (ஆளும் பாஜவினர்) தகவலறியாத அல்லது அறிவு முதிர்ச்சியற்ற, சில நேரங்களில் அறியாமை, ஆதாரமற்ற வாதங்கள் ஆகியவற்றின் மாயையான அடிப்படைவாதச் சூழல் அமைப்பு எப்படி பரஸ்பர பாராட்டுக்கு வழிவகுக்கிறது என்பதை எண்ணி நான் ஆச்சரியப்படுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: HBD ஆனந்த் பாபு - மறக்க முடியுமா 'பூங்குயில் ராகமே' நாயகனை!

Last Updated : Aug 30, 2021, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details