கடலூர்: த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் இப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக காட்டப்பட்டுள்ளதாக பாமகவினர் குற்றஞ்சாட்டினர். மேலும் சூர்யா மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும் கூறிவந்தனர்.
கடலூர் பாமக மாணவர் சங்கம் மனு
இந்நிலையில் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திடம் மாவட்ட பாமக மாணவர் அணியின் சார்பில், அக்கட்சியின் மாணவர் சங்க மாநிலச் செயலாளர் விஜயவர்மன் கொடுத்துள்ள மனுவில், "நடிகர் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது.
இது இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மைச் சம்பவத்தை அடிப்படையில் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரம் அதே உண்மைப்பெயரில் இருக்க, காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்தவர் பெயரை மட்டும் குருமூர்த்தி என்று மாற்றியும், அவரை வன்னியராக சித்தரித்தும் உள்ளனர்.