காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையேயான சந்திப்பு இன்று நிகழவுள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் புறப்பட்டார்.
சீன அதிபர் வருகை - நரேந்திர மோடி ட்வீட் - நரேந்திர மோடி ட்வீட்
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையொட்டி நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
![சீன அதிபர் வருகை - நரேந்திர மோடி ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4717073-1092-4717073-1570774832422.jpg)
Modi
இந்நிலையில் தற்போது நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், "சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா-சீனா இடையேயான உறவு இந்த உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்" என மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதையே அவர் சீனா மொழியிலும் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.