பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளிக்கல்வித்துறையின் ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி நியமனம் செய்யப்படுவார் என ஏற்கனவே 2014 ஜூன் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்துவற்கான பணிகளையும், ஒழுங்குப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்வார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம், தொடக்கக்கல்வித்துறை, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் ஆகியவற்றின் பணிகளையும், நடவடிக்கையையும் கண்காணித்து மேற்பார்வையிடுவார்.
கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளை ஆய்வு செய்து ஆலோசனைகளையும் வழங்குவார். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான நடவடிக்கையில் மேல்முறையீட்டு அதிகாரியாக இவர் நியமனம் செய்யப்படுகிறார்.