தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்பது மக்களின் கடமை - மனிதன் இயற்கையுடன் இணைந்து செயல்படாவிட்டால் இயற்கையே இந்த போரில் வெல்லும் உயர்நீதிமன்றம்

சென்னை: கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மக்களின் கடமை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மக்களின் கடமை மத்திய, மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மக்களின் கடமை
மத்திய, மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மக்களின் கடமை மத்திய, மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மக்களின் கடமை

By

Published : Apr 12, 2020, 9:38 AM IST

தமிழ்நாட்டில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் நடத்தி வந்த கொரியாவைச் சேர்ந்த சோ ஜே வான் மற்றும் சோய் யாங்க் சுக் ஆகியோர், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் ஏய்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும், சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது. ஆனால், தங்களை சிறையில் இருந்து விடுவிக்காமல், ஊரடங்கு காரணமாக திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்துவிட்டதாகவும், அந்த முகாமில் 80 பேர் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் கரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் தங்க அனுமதி வழங்கக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை, நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், போதுமான இடவசதி உள்ளதாகவும், கரோனா தொற்று யாருக்கும் இல்லை என முகாம் பொறுப்பாளரான சிறப்பு துணை ஆட்சியர், முகாம் முழுவதையும் காணொலி காட்சி மூலமாக காண்பித்தார். இதை பார்வையிட்ட நீதிபதி, மனுதாரர்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு தங்க அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என கூறி இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டதும் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. வீடியோ காட்சிகள் மூலமாக வழக்குகள் விசாரணைக்கு விசாரிக்கப்படும்போது அதன் உண்மை தன்மை தெரியவருவதால், ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்போது இந்த நடைமுறையை பின்பற்றலாம் என யோசனை தெரிவித்தார்.

மேலும் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மக்களின் கடமை என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், மனிதன் இயற்கையுடன் இணைந்து செயல்படாவிட்டால் இயற்கையே இந்த போரில் வெல்லும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

திருச்சியில் வரையப்பட்ட கரோனா விழிப்புணர்வு ஓவியம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details