தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆழ்கடல் வழியே ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்கள் அமைக்கும் திட்டம் தொடங்கிவைப்பு - சென்னையிலிருந்து அந்தமானுக்கு ஆழ்கடல் வழியே இணையம்

சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ஆழ்கடல் வழியாக ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னையில் இன்று தொடங்கிவைத்தார்.

Ravishankar
Ravishankar

By

Published : Jan 10, 2020, 9:35 AM IST

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இணையதள வசதியை மேம்படுத்தும் வகையில் சென்னையிலிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ஆழ்கடல் வழியாக ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்கள் அமைக்கும் திட்டத்தை தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னையில் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி.கே. ஜோஷி கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தொலைத்தொடர்புத் துறை நிதியில், ஆயிரத்து 224 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் சென்னையிலிருந்து அந்தமான் நிக்கோபாரில் உள்ள போர்ட் பிளேர், ரங்கட், ஹாவ்லாக், லாங் ஐலாண்ட், ஹட் பே, கார் நிக்கோபார், காமோர்டா, கேம்ப்பெல் பே ஆகிய தீவுகளுக்கு ஆழ்கடல் மூலம் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பொருத்தப்படும். ஜூன் மாதத்திற்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் அங்கு அதிவிரைவு இணையதள சேவைகளை வழங்க முடியும். இந்தத் திட்டத்தை ஒப்பந்தம் மூலம் செயல்படுத்த ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கியுள்ளது. தற்போதுள்ள செயற்கைக்கோள் மூலம் தொலைத்தொடர்பு அதிக செலவு ஏற்படுத்துவதாக இருப்பதோடு, அங்குள்ள தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இல்லை என்பதால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய ரவிசங்கர் பிரசாத், "அந்தமான் ஒரு சிறிய இந்தியாவைப் போன்றது. தமிழர்கள், மலையாளிகள், பிகாரிகள் என நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ளவர்கள் இங்கு வசிக்கிறார்கள். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் அந்தமான் பகுதியில் 4000 மடங்கு தொலைத்தொடர்பு வசதி அதிகரிக்கும். அடுத்தகட்டமாக கொச்சியிலிருந்து லட்சத் தீவுகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆழ்கடல் வழியே ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பொருத்தப்படும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அடுத்தகட்டமாக அஞ்சல் துறை மேம்படுத்தப்படும். 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு செல்போன் தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 268 செல்போன் தொழிற்சாலைகள் உள்ளன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய செல்போன் உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. செல்போன் உற்பத்தியில் மிகப்பெரிய மையமாக தமிழ்நாடு உருவாகிவருகிறது" என்றார்.

இதையும் படிங்க: உயிருள்ள புறாவை சாப்பிட்ட பெண் - சோக பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details