தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தண்ணீர் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி - பூந்தமல்லி அரசு மருத்துவமனை

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே தண்ணீர் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் பக்கெட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி
தண்ணீர் பக்கெட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

By

Published : Oct 16, 2022, 3:00 PM IST

சென்னை:மத்தியப்பிரதேச மாநிலத்தைச்சேர்ந்தவர் ராகுல் குமார் பைகா(28). இவர் தனது குடும்பத்துடன் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் தங்கி மெட்ரோ ரயில் கட்டுமானப்பணியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சந்திரிகா பைகா என்ற 1 1/2 வயது பெண் குழந்தை உள்ளது.

நேற்று(அக்.15) காலை ராகுல் குமார் வேலைக்குச்சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தை மட்டும் இருந்தனர். மாலை வீட்டிற்கு வெளியே இருந்து விட்டு உள்ளே சென்று பார்த்தபோது வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தையின் முகம் மூழ்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்து போன குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:13 வயது சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர் கைது - இதர தீட்சிதர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details