தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் கரோனாவிலிருந்து ஒன்றரை லட்சம் பேர் குணமடைந்தனர் - COVID-19

சென்னை: கரோனாவிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Oct 8, 2020, 1:58 PM IST

சென்னையில் கரோனாவால் நாள்தோறும் 1000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.

அண்ணா நகர், கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தப் பரவலைக் குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள், மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 779 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 333 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 110 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். சென்னையில் குணமடைந்தோரின் விழுக்காடு 91 ஆக உள்ளது.

மண்டலவாரியான குணமடைந்தோரின் பட்டியல்:

  • கோடம்பாக்கம் - 17,973 பேர்
  • அண்ணா நகர் - 17,895 பேர்
  • ராயபுரம் - 15,211 பேர்
  • தேனாம்பேட்டை - 15,155 பேர்
  • தண்டையார்பேட்டை - 13,001 பேர்
  • திரு.வி.க. நகர் - 12,151 பேர்
  • அடையாறு - 12,493 பேர்
  • வளசரவாக்கம் - 10,480 பேர்
  • அம்பத்தூர் - 11,302 பேர்
  • திருவொற்றியூர் - 4,890 பேர்
  • மாதவரம் - 5,732 பேர்
  • ஆலந்தூர் - 6,389 பேர்
  • சோழிங்கநல்லூர் - 4,585 பேர்
  • பெருங்குடி - 5,623 பேர்
  • மணலி - 2,513 பேர்

மேலும் மூன்றாயிரத்து 336 பேர் இந்தக் கரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details